Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எடப்பாடி பழனிசாமி திருச்சி தொகுதியில் இருந்து இன்று தனது பரப்புரையைத் தொடங்குகிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “அன்பார்ந்த தமிழ்நாடு வாக்காளர் பெருமக்களுக்கு வணக்கம்.
உங்கள் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே அதிமுக தேர்தல் அறிக்கை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களின் பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளோம்” என்று விளக்கினார்.
வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மகளிருக்கு மாதந்தோறும் 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க வேண்டும், வருடத்திற்கு ஆறு விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், மாநிலங்களுக்கு உரிய நிதிப் பகிர்வு, மேகதாது, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்
வெற்று பிம்பங்களோ விளம்பர நோக்கங்களோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளைக் கொண்ட உண்மையான தேர்தல் அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் உங்களை சந்திக்க வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்